தொழிலாளர் புரட்சிக் கட்சி வெளியேற்றப்பட்டதன் 40-வது ஆண்டு நிறைவை லண்டன் கூட்டம் குறிக்கிறது
1980களின் நடுப்பகுதியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) வெளியேற்றப்பட்டதானது, சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக அமைந்தது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போக்காக இருந்த ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் உயிர் வாழ்க்கைக்கே அது பெரும் சவாலாக இருந்தது.
